/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் திருக்கார்த்திகை
/
குன்றக்குடியில் திருக்கார்த்திகை
ADDED : டிச 04, 2025 05:29 AM

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சண்முகநாதப் பெருமான் ஆறு திருமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் காட்சியளிக்கும் தலமாக குன்றக்குடி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத்திருநாளான நேற்று, அதிகாலையே நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காரைக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நடைபயணமாக குன்றக்குடி கோயிலுக்கு வந்து கோயில் அடிவாரத்தில் விளக்கு ஏற்றி வழி பட்டனர்.
மாலையில், மலை உச்சியில் இருந்து சுவாமி கீழே இறங்கி கார்த்திகை மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின பூஜை மடத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கார்த்திகை மடத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

