ADDED : பிப் 15, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லல் :   கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அழகப்பன் தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். 6 முதல் 9 ம்வகுப்பு வரை 18 மாணவ, மாணவிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆசிரியர் கண்ணதாசன் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நடுவர்களாக ஆசிரியைகள் கற்பகவல்லி, விஜயராணி இருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.

