ADDED : பிப் 20, 2026 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடியில் நகரத்தார் கோயில்களில் ஒன்றான கண்டீஸ்வரர் காமாட்சியம்மன் கோயிலில் பன்னிரு திருமுறை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் திருமுறை வகுப்பு தொடக்க விழா நடந்தது.
திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
இதில் துளாவூர் ஆதினம் நிரம்பழகிய தேசிக பரமாச்சாரிய சுவாமி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், தருமபுரம் ஆதின கட்டளை தம்பிரான் சிவகுருநாத் முன்னிலை வகித்தனர்.
கோயில் டிரஸ்டிகள் பிச்சப்பா மணிகண்டன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

