sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்

/

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்


ADDED : ஏப் 03, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஏப்.11ல் நடைபெற உள்ள கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏப்.7ல் யாகசாலை பூஜை துவங்குகின்றன.

இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற உள்ள நான்காவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் பூமாயி அம்மன் உள்ளிட்ட சப்தமாதர் சன்னதியும், பைரவர். ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய உபசன்னதிகள், 3 நிலை ராஜகோபுரம்,மூலவர் விமானம், கோயில் முன் மண்டப துாண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு ஆகிய திருப்பணிகள் நிறைவடைந்து, தற்போது யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மூலவர் அம்பாளுக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலையும், 6 குண்டங்களுடன் பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலைக்கு தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. யாகசாலை பூஜை ஏப்.7 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,தன பூஜைகளுடன் துவங்குகின்றன.

ஏப்.8 மாலையில் முதற்கால யாக பூஜை, மார்ச் 9 காலை,மாலை 2,3 ம் காலயாக பூஜைகள்,ஏப்.10ல் காலை,மாலையில் 4,5ம் காலயாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.11 அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும்,காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 8:50 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும்,மாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். யாகசாலை பூஜைகளில் பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் தலைமையில் 70க்கும் மேற்பட்ட சிவாச்சார்யார்கள் பஙகேற்க உள்ளனர். ஏற்பாட்டினை முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர்,தக்கார் து.பிச்சுமணி,செயல் அலுவலர் எஸ்.விநாயகம் ஆகியோர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us