sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்

/

இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்

இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்

இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்


ADDED : டிச 11, 2024 07:41 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகை பிடித்தவர்களை கண்டித்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 20க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கட்டடத்திலும் அருகில் ஒரு கட்டடத்திலும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் இரவு நேர காவலாளி இல்லாத காரணத்தினால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இரவில் குடிமகன்கள் மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளிடமும், செவிலியர்களிடமும் தகராறு செய்து வருகின்றனர்.

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள அந்த இடத்தில் சிலர் வந்து புகை பிடிப்பதோடு சிறுநீரும் கழித்து வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நேற்று அப்பகுதியில் புகை பிடித்த ஒருவரை செவிலியர் ஒருவர் கண்டித்த போது அவர் செவிலியரை மிரட்டியதைத் தொடர்ந்து செவிலியர் மற்றும் ஊழியர்கள் இளையான்குடி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us