/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி
/
மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி
ADDED : செப் 23, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துார், மூக்கனுாரைச் சேர்ந்தவர் சிங்காரம், 40. இவரது மகன் லோகேஷ், 14. பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் கரிபிரான், 60.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு, பெருமாபட்டு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றனர். அப்போது முருகன் என்பவரது விவசாய நிலத்தின் வேலியை கடந்து சென்றபோது, வேலியில் பாய்ந்த மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில், மூவரும் பலியாகினர். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.