sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

/

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்


ADDED : செப் 16, 2025 12:20 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கையில் மாமனை கொலை செய்த மைத்துனர்,அவரது நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாயக்கண்ணன் 32. இவரது மனைவி அன்னமணி. ஒரு மகனும், மகளும் உள்ளனர். அன்னமணியின் சகோதரர் அய்யனார் 30. மாயக்கண்ணன் மற்றும் அய்யனாருக்கு சொத்து பிரச்னை இருந்தது.

2010 மே 16ல் கொந்தகை கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு மாயக்கண்ணன் வந்தார். அவரை அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் நாகேந்திரன் 35, ராமர் 30 வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.அன்னமணி திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அய்யனார், நாகேந்திரன், ராமர் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.3700 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us