/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்
/
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்
ADDED : மார் 04, 2024 05:24 AM
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமான புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
இந்தாண்டு திருவிழா 15ம்தேதி வெள்ளிகிழமை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ம் தேதி வெள்ளிகிழமை காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும், 23ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி செய்து வருகின்றனர்.

