/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் சுங்கச்சாவடி கட்டணம்; தாசில்தார் தலைமையில் சமரசம்
/
திருப்புவனம் சுங்கச்சாவடி கட்டணம்; தாசில்தார் தலைமையில் சமரசம்
திருப்புவனம் சுங்கச்சாவடி கட்டணம்; தாசில்தார் தலைமையில் சமரசம்
திருப்புவனம் சுங்கச்சாவடி கட்டணம்; தாசில்தார் தலைமையில் சமரசம்
ADDED : மார் 17, 2024 11:51 PM
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக சமாதான கூட்டம் நடந்தது.
மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி,போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் திருப்பாச்சேத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினசரி வாழைக்காய், இலை, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மதுரை மார்கெட்டிற்கு சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும்.
எனவே உள்ளுர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளுர் வாகனங்களும் முறையான கட்டணம் செலுத்த வேண்டும் என அனுமதிக்க மறுத்தது.
இதனையடுத்தது கட்டணத்தில் இருந்து விலக்கு அல்லது சலுகை வழங்க வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் அறிவித்தனர். இது குறித்து திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம், வாகன உரிமையாளர்களுடன் தாசில்தார் விஜயகுமார் சமாதான கூட்டம் நடத்தினார்.
கூட்ட முடிவில் உள்ளுர் வணிக ரீதியான வாகனங்களுக்கு ரூ.4,745 ல் இருந்து பயன்பாட்டு வாகன கட்டணமான ரூ.330 யை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் கூறியதை, வாகன ஓட்டிகள் ஏற்றுக்கொண்டனர்.

