/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பாரம்பரிய மஞ்சள் நீர் ஊற்றும் விழா
/
மானாமதுரையில் பாரம்பரிய மஞ்சள் நீர் ஊற்றும் விழா
ADDED : ஆக 11, 2025 03:56 AM
மானாமதுரை: மானாமதுரையில் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடந்தது.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 157 மண் அடுப்பில் ஆடி முளைப்பாரி உற்ஸவ பொங்கல் விழா துவங்கியது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,பறவை காவடி, அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் முளைப்பாரி வளர்த்து அதனை முக்கிய வீதிகளின் வழியே கொண்டு வந்து அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சளால் அபிேஷகம் நடந்தது.
தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன், மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும், முறைப்பெண்கள் மீது ஆண்களும் மாற்றி, மாற்றி மஞ்சள் நீர் ஊற்றிக் கொண்டனர்.