/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் கம்பங்களால் போக்குவரத்து நெரிசல்
/
மின் கம்பங்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 19, 2025 02:08 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ரோட்டோரத்தில் இடையூறாக உள்ள மின்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் போஸ்ட் ஆபிசில் இருந்து வீரையா கோயில் வரை 200 மீட்டர் துாரம் குறுகியதாக உள்ளது. சில இடங்களில் மின்கம்பங்கள் ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் சாலை குறுகியதாக இருப்பதால் மற்ற வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.
நெரிசல் ஏற்பட்டால் வேறு எந்த மாற்று வழியும் இல்லாத நிலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இச்சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.