ADDED : ஆக 24, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
திருப்பாச்சேத்தி, ஆக. 25-
திருப்பாச்சேத்தி அருகே சலுப்பனோடை கிராமத்தில் வேளாண் துறை சார்பில் ஒருநாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. சிவகங்கை துணை இயக்குனர் பத்மாவதி தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு தரமான விதை தேர்வு, மண் வள பரிசோதனை, நேர்த்தி செய்தல் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டன. உதவி இயக்குனர் மலர்விழி, பேராசிரியர் பிரகாஷ், உதவி விதை அலுவலர் தங்கையா பங்கேற்றனர்
