ADDED : பிப் 17, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஜாலி போனிக்ஸ் பயிற்சி நடந்தது.
பயிற்சியில் 124 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியானது சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிவகங்கை வட்டார வள மையத்தில் நடந்தது. பயிற்சியை சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபாராணி துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாலாமணி, இந்திராணி மற்றும் ஞானகிரேஸ் வளர்மதி பார்வையிட்டனர். கருத்தாளராக ருச்சிகா செயல்பட்டார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தனலெட்சுமி, செந்தில்குமார் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.