ADDED : அக் 31, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை வகித்தார். சாரண ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி மாணவிகள் சங்கீதா, தேவிகாதர்ஷினி ஆகியோர் பள்ளிக்கு மரக் கன்றுகளை வழங்கினர்.
பள்ளி வளாகத்தில் சாரண இயக்க மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர் ராம்குமார் நன்றி கூறினார்.

