
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் பூவை செங்குட்டுவன் பட திறப்பு விழா நடந்தது.
சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். நல்லாசிரியர் பகீரதநாச்சியப்பன், தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.
குருசாமி, மயில்வாகனன், அனந்தராமன், முன்னாள் செயலாளர்கள் யுவராஜ், முத்துப்பாண்டியன், ராமசந்திரன், பொருளாளர் பால்ராஜ், துணை செயலாளர் இந்திராகாந்தி, நிர்வாக குழு ரமேஷ் கண்ணன் பங்கேற்றனர். நிர்வாக குழு முத்துராஜா நன்றி கூறினார்.

