sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

/

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரால் அவதி


ADDED : செப் 29, 2025 06:16 AM

Google News

ADDED : செப் 29, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே ஏனாதி கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் மதகு அணையில் இருந்து ஏனாதி கோட்டை எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மானாமதுரை மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரோட்டில் உள்ள ரயில் பாதையின் கீழ் புறம் சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு மழை நீர் வெளியேற முறையான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக தற்போது சிறிய மழை பெய்தாலே இங்கு அதிகளவில் மழை நீர் தேங்குவதால் இவ்வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் ஆட்டோ, கார் போன்ற சிறிய ரக வாகனங்கள் மழை நீரில் சிக்கி அடிக்கடி பழுதாகி வருவதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகிற நிலையில் ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us