/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்
/
சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்
ADDED : டிச 10, 2024 05:12 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே தென்னீர்வயலில் சரக்கு லாரிகள் நேருக்குநேர் மோதியதில் லாரி டிரைவர் உட்பட 4 பேர் காயமுற்றனர்.
மானாமதுரை அருகே மேலப்பசலை டிரைவர் ராஜாங்கம் 55. இவர் லாரியில் செங்கல் ஏற்றிக்கொண்டு மானாமதுரையில் இருந்து மதகுபட்டி நோக்கி சென்றார். செங்கல்லாரியில் 3 பெண்கள் பயணித்தனர். அதேபோன்று செங்கல்பட்டில் இருந்து சிவகங்கை நோக்கி சரக்கு லாரி வந்தது. அந்தலாரியை செங்கல்பட்டு சத்தியமூர்த்தி 54 ஓட்டினார்.
சிவகங்கை தென்னீர்வயல் அருகே பைபாஸ் ரோட்டில் வந்த போது,இரு லாரிகளும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், லாரி டிரைவர் உட்பட 4 பேர் காயமுற்றனர்.
சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.