/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி இருவர் கைது
/
கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி இருவர் கைது
கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி இருவர் கைது
கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி இருவர் கைது
ADDED : ஏப் 25, 2025 06:33 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே செங்குளிப்பட்டியில் கணவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்ததாக மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் செங்குளிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 40. இவருக்கு கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 9 வயதிலும் 4 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சுரேஷ்குமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரின் தந்தை இறந்து விட்டதால் சொந்த ஊரான செங்குளிப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது தான் அனுப்பிய பணம் குறித்து கேட்டபோது கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சுரேஷ்குமார் கடந்த வாரம் டூவீலர் விபத்தில் காயமடைந்து வீட்டில் இருந்தார். செவ்வாய் கிழமை மாலை 4:00 மணியளவில் வீட்டில் படுத்து இருந்த போது சிவகங்கை சேதுபதி நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜீவா 29 மற்றும் ஆனைமாவளியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபாகரன் 27 இருவரும் தனது மனைவி கீதா துாண்டுதலின் பேரில் அறைக்கு வந்து எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து தன்னை கொல்ல முயற்சி செய்ததாக மதகுபட்டி போலீசில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். சுரேஷ் குமாரின் மனைவி கீதா பூச்சி கொல்லி மருந்தை சாப் பிட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மதகுபட்டி போலீசார் ஜீவா மற்றும் பிரபாகரனை கைது செய்தனர்.