ADDED : ஆக 13, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைதாகினர். இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில், ஆக., 9 ம் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது.
போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவினை ஆய்வு செய்து, உண்டியலில் திருடியதாக திருவாரூர் மாவட்டம், இடையூரை சேர்ந்த முருகானந்தம் 45, இளையான்குடி பகிரா தெரு துல்கருணை 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

