sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புதிய பென்ஷன் திட்டம் ரத்துகோரிடூவீலர் பிரசாரம் இன்று துவக்கம் மே 16 ல் முதல்வரிடம் மனு வழங்க முடிவு

/

புதிய பென்ஷன் திட்டம் ரத்துகோரிடூவீலர் பிரசாரம் இன்று துவக்கம் மே 16 ல் முதல்வரிடம் மனு வழங்க முடிவு

புதிய பென்ஷன் திட்டம் ரத்துகோரிடூவீலர் பிரசாரம் இன்று துவக்கம் மே 16 ல் முதல்வரிடம் மனு வழங்க முடிவு

புதிய பென்ஷன் திட்டம் ரத்துகோரிடூவீலர் பிரசாரம் இன்று துவக்கம் மே 16 ல் முதல்வரிடம் மனு வழங்க முடிவு


ADDED : மே 05, 2025 03:59 AM

Google News

ADDED : மே 05, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் மே 16 வரை டூவீலர் பிரசார இயக்கம் தமிழக அளவில் நடத்தப்படும்'' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது:

2003 ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பென்ஷன், பணிக்கொடை, குடும்ப பென்ஷன் கிடைக்கவில்லை. தமிழகம் தவிர்த்து பிற மாநில அரசு ஊழியர்களுக்கு சந்தை மதிப்பிற்கு ஏற்ப அவை வழங்கப்படுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவே இல்லை. ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷனை தான் அமல்படுத்தியுள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 4 ஆண்டுகளை கடந்த பின்பும் இதனை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து தான், இன்று கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கோயம்புத்துார் மாவட்டம் வாளையார், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை நோக்கி டூவீலர் பிரசார இயக்கம் நடத்தப்படும். இதில் இயக்க நிர்வாகிகள் பங்கேற்பர். மே 16 ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us