ADDED : அக் 30, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார: திருப்புத்துாரில் நேற்று மாலை 4:00 மணி அளவில் பூங்கா அருகில் சிவகங்கை ரோட்டில் வேட்டங்குடிப்பட்டி சண்முகம் மகன் ரவிச்சந்திரன் 58 என்பவர் டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் சிவகங்கை சென்று கொண்டிருந்தார்.
எதிரே திருப்புத்துாருக்கு வந்த வாணியங்காடு ரவிச்சந்திரன் மகன் ரமேஷ்குமார்18 (ஹெல்மெட் அணியவில்லை) ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இருவரும் காயம் அடைந்தனர். ரவிச்சந்திரன் இறந்தார். ரமேஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

