sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்துடைப்பாக நடக்கும் ஊருணி மேம்பாடு

/

கண்துடைப்பாக நடக்கும் ஊருணி மேம்பாடு

கண்துடைப்பாக நடக்கும் ஊருணி மேம்பாடு

கண்துடைப்பாக நடக்கும் ஊருணி மேம்பாடு


ADDED : ஜூலை 31, 2025 10:45 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; புதுவயல் பேரூராட்சியில் ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொருத்தப்படாமல் வீணாகி வருகிறது.

புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 11 வார்டு வாணியர் தெருவில் 2023 ஆம் ஆண்டு ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி பராமரிக்கப்பட்டது. ஊருணியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டது.

மேலும், சிறுவர்கள் விளையாடும் பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தப்படவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

தவிர, மின் விளக்குகளும் எரியவில்லை. பல லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டம் பயனின்றி வீணாகி விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் கூறுகையில்:

ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊருணி பராமரிக்கப்பட்டு நடைபாதை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பணிக்கான பில் வழங்கவில்லை. விரைவில், பொருட்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us