sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

/

கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்


ADDED : மே 03, 2025 06:21 AM

Google News

ADDED : மே 03, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி : கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படும் என காவல் துறை மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கீழடியில் கடந்தாண்டு மாவட்ட கலெக்டரின் கனிம வள நிதியில் 24 லட்ச ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் காவல் துறை பயன்பாட்டிற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படவில்லை.

முதல்வர் சட்டசபையில் அறிவித்தற்கு ஏற்ப சொந்த கட்டடம் கட்டும் வரை காவல்துறை கட்டடத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தினசரி இரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் அருங்காட்சியகத்தில் உள்ள இரு போலீசாரால் சமாளிக்க முடியவில்லை.

அருங்காட்சியகத்தை காண தினசரி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் நிலையில் கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பது அவசியம். எனவே தமிழக அரசு கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us