sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தனியார் வாகனங்களில் சைரன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

தனியார் வாகனங்களில் சைரன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனியார் வாகனங்களில் சைரன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனியார் வாகனங்களில் சைரன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 18, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 18, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் தனியார் வாகனங்களில் பலரும் போலீசார் பயன்படுத்தும்விளக்குகள், ஆம்புலன்சில் பொருத்தப்படும் சைரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அவசர பணி நிமித்தம்செல்லும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் வாகனங்களின் முன்புறமும் மேற்பகுதியிலும் சிவப்பு, நீலம் உள்ளிட்ட விளக்குகளை பொருத்துவது வழக்கம்,அவசர காலங்களில் இவற்றை தொடர்ச்சியாக சுழல விட்டு செல்லும் போது மற்ற வாகன ஓட்டிகள் விலகி வழிவிடுவது வழக்கம்.

அதே போல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஒலிக்க விடப்படும் சைரன் சப்தத்தை கேட்டே மற்ற வாகன ஓட்டிகள் விலகி வழிவிடுவார்கள், ஆனால் திருப்புவனம் பகுதிகளில் அரசியல்வாதிகள்உள்ளிட்ட பலரும் தங்களது வாகனங்களில் இதுபோன்ற விளக்கு, சைரன்களை பொருத்தி கொண்டு வலம் வருகின்றனர்.

திருப்புவனத்தில் தினசரி போக்குவரத்து நெரிசலால் பலரும் தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலான காலங்களில் சைரன்களை ஒலிக்க விட்டபடியே வருவதால் மற்றவர்கள் விலகி வழிவிடுகின்றனர். வாகனத்தின் இன்ஜின் முன்புறம் சிவப்பு விளக்கு, சைரன் சவுண்ட் விட்டபடியே தனியார் வாகனங்கள் அடிக்கடி வருவதால் உண்மையாகவே ஆம்புலன்ஸ் வந்தால் கூட பலரும் அலட்சியத்தில் வழிவிடுவது இல்லை.

திருப்புவனம் பகுதிகளில் இதுபோன்று பலரும்வலம் வருவது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.






      Dinamalar
      Follow us