/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
/
சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
ADDED : அக் 25, 2024 05:26 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு யாகவேள்வி நடத்தப்பட்டு வடுக பைரவருக்கு அபிஷேகங்கள், வழிபாடு நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார்.
பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் வடுக பைரவருக்கும், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கால பைரவருக்கும் கிராம மக்கள் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தேவகோட்டை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பட்டுக்குருக்கள் நகரில் உள்ள ஸ்வர்ண பைரவருக்கு சீரான மழையும், பயிர் விளைச்சல் பெருகவும் சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தேவகோட்டை நகரில் உள்ள ஸ்வர்ண ஆதர்ஷ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.