நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை ஹோமம் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர்,சந்தனம்,திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

