ADDED : பிப் 15, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை இறகுசேரி மந்திர மூர்த்தி விநாயகர் கோயிலில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, ஹயக்ரீவர் ஹோமம், வித்யா கணபதி ஹோமம், வித்யா சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து சரஸ்வதி பீடத்தில் உள்ள மந்திரமூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. கோயில் சார்பில் சிறுவர்களுக்கு எழுதுபொருள் வழங்கப்பட்டன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு சரஸ்வதிக்கு சகஸ்ரநாம ஹோமம் பூஜையை தொடர்ந்து சரஸ்வதிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

