sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்

/

மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்

மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்

மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்


ADDED : செப் 02, 2025 03:34 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மேய்ச்சல் தள பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வெட்ட பொது ஏலம் விடப்பட்டது. இதில், வேலிக்கருவேல மரங்கள் தவிர பிற மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் போது கட்டுமானங்களுக்கோ கரைப்பகுதிக்கோ பாதிப்பு ஏற்படக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் கண்மாய்க்குள் தண்ணீர் தேங்கினால் அப்புறப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், கருவேல மரங்கள் வெட்டுவதாக கூறி பசுமை மரங்கள் வெட்டி கடத்தியதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

கிராம மக்கள் கூறுகையில்: வேம்பு, புளி, வாகை உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. பசுமை மரங்களை வெட்டியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் கூறுகையில்: மரங்கள் வெட்டப்பட்டது குறித்து புகார் ஏதும் வரவில்லை. விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us