sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

/

கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்


ADDED : மார் 25, 2025 05:15 AM

Google News

ADDED : மார் 25, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் குறுகியதாக உள்ள கடைவீதி ரோட்டிற்கு மாற்றாக புதிய ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டவராயன்பட்டியில் கடைவீதி ரோடு முக்கிய ரோடாக உள்ளது. திருப்புத்தூர், பொன்னமராவதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாகவே செல்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் நன்கொடை மூலம் போடப்பட்ட இந்த ரோட்டிற்கு அருகாமையில் குடியிருப்புக்கள் உள்ளன. இதனால் வாகனங்கள் விலகிச் செல்ல இடமில்லை.

இரு பஸ்கள் வந்தால் கடந்து செல்ல முடியாது. மேலும் இதே ரோட்டில் 8க்கும் அதிகமான குறுக்குத் தெரு ரோடுகள் இருபுறமும் செல்கின்றன. இதைத் தவிர்க்க இந்த ரோட்டை உள்ளூர் போக்குவரத்திற்கும், பெரிய வாகனங்கள் செல்ல வசதியாக ஊருக்கு வெளியிலிருந்து திருப்புத்தூர், பொன்னமராவதி ரோடுகளை இணைக்கும் புதிய ரோடு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் கூறியதாவது:

இந்த ரோட்டில் நெருக்கடியைத் தவிர்க்க திருப்புத்தூர் ரோட்டில் தண்ணீர் பந்தலில் இருந்து பன்னிக்குட்டி கண்மாய் கரை வழியாக மங்கம்மா சாலையில் சந்திக்கும் வரை புதிய ரோடு அமைக்க வேண்டும். பெரிய வாகனங்களும் எளிதாக செல்ல முடியும். நெடுஞ்சாலைத்துறையினர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இப்புதிய ரோடு அமைவதின் மூலம் திருப்புத்தூர், பொன்னமராவதியிலிருந்து வரும் வாகனங்கள் எளிதாக கண்டவராயன்பட்டியை கடந்து செல்லும் என தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us