sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

/

சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு


ADDED : நவ 02, 2025 11:00 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 2000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கும். தேனி மாவட்டத்தில் சில வாரங்களில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.,27ல் 70.24 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக அக்.,27ல் திறக்கப்பட்ட நீர் நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நேற்று காலை 10:00 மணிக்கு ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு நவ.,6ல் நிறுத்தப்படும்.

நேற்று அணை நீர்மட்டம் 69.03 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1148 கன அடி. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1280 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி, என மொத்தம் வினாடிக்கு 3499 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us