sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்

/

சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்

சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்

சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்


ADDED : அக் 27, 2025 04:17 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி அருகே கொந்தகையில் தொட்டி சேதமடைந்த நிலையில் தினசரி ஏற்றப்படும் குடிநீர் வீணாகி வருகிறது.

திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் பொது தேவைகளுக்காக தெருக்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அருகிலேயே தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கிராமங்களில் பெரும்பாலும் கண்மாய் மற்றும் குளம் ஆகியவற்றின் அருகே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கான மின்கட்டணத்தை அந்தந்த ஊராட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும், ஆனால் கடந்த சில வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை.

ஆனாலும் மின்வாரியம் இணைப்பை துண்டிப்பதில்லை. கிராமங்களில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப தனியாக ஆட்கள் யாரும் நியமிக்கப்படாததால் திறந்த நிலையில் இருக்கும் ஸ்விட்ச் பாக்சை பயன்படுத்தி அருகில் இருப்பவர்கள் மோட்டார்களை இயக்குகின்றனர். கீழடி அருகே கொந்தகை பஸ் ஸ்டாப் பின்புறம் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது.

இதனால் மோட்டார் இயக்கி தொட்டியில் தண்ணீர் நிரப்பினாலும் சில நிமிடங்களிலேயே தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது.

ஆனாலும் தொட்டி சரி செய்யப்படாமல் உள்ள நிலையில் சேதமடைந்த தொட்டியில் மோட்டாரை இயக்கி தண்ணீரை நிரப்புகின்றனர். இதனால் தேவையின்றி மின்சாரம் விரயமாகி மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.

பலமுறை தண்ணீர் தொட்டியை சரி செய்ய வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் சேதமடைந்த தொட்டியிலேயே தண்ணீர் நிரப்பப்பட்டு வீணாகி வருகிறது.






      Dinamalar
      Follow us