/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்
/
பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்
ADDED : மே 04, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்மலை, : பிரான்மலையில் குயிலமுதநாயகி திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நாளை (மே 5) நடக்கிறது.
பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரிய இக்கோயில் குன்றக்குடி ஆதினத்துக்கு உட்பட்டது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாளான நாளை காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் சமணர்களுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சுவாமி யானை வாகனத்திலும் அம்மன் பல்லக்கிலும் திருவீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.