/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மருத்துவக்கல்லுாரிக்கு தடையில்லா மின்சாரம் எப்போது
/
சிவகங்கை மருத்துவக்கல்லுாரிக்கு தடையில்லா மின்சாரம் எப்போது
சிவகங்கை மருத்துவக்கல்லுாரிக்கு தடையில்லா மின்சாரம் எப்போது
சிவகங்கை மருத்துவக்கல்லுாரிக்கு தடையில்லா மின்சாரம் எப்போது
ADDED : ஏப் 27, 2025 07:19 AM

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என்று பொதுமக்களும் டாகர்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தினசரி புற நோயாளிகளாக 1000க்கும் மேற்பட்டோரும் உள்நோயாளிகளாக 800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தீவிர சிசிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு மின் விநியோகத்திற்காக 2 மின் மாற்றிகள் உள்ளது. மின் தடையானால் அதை சமாளிக்க 3 ஜெனரேட்டர்கள் உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவுள்ளது.
ஒவ்வொரு துணை மின்நிலையத்தில் இருந்தும் தனி பீடர் மூலம் மின் இணைப்பு மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு மட்டும் தனி பீடர் மூலம் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனால் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனையிலும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் மூலம் சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை இயக்க முடியவில்லை.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க தனி பீடர் அமைக்க மின்வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மின்வாரி அதிகாரிகள் கூறுகையில், மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு தடையின்றி மின் விநியோகம் கொடுத்து வருகிறோம். சில நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது.
அதற்கும் மாற்று ஏற்பாடு செய்து வருகிறோம். தனி பீடர் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுதான் கொடுக்க முடியும் என்றார்.