sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை நகராட்சியில் அனுமதியில்லாத கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படுமா

/

சிவகங்கை நகராட்சியில் அனுமதியில்லாத கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படுமா

சிவகங்கை நகராட்சியில் அனுமதியில்லாத கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படுமா

சிவகங்கை நகராட்சியில் அனுமதியில்லாத கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படுமா


ADDED : ஜூலை 18, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் நகராட்சி அனுமதியுடன் கட்டப்படுகிறாதா, அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது நகர் விரிவாக்கத்தில் வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மக்கள் வீடுகள் கட்டவோ, அல்லது விரிவாக்கம் செய்யவோ வரைபடம் தயாரித்து நகராட்சியில் திட்ட அனுமதி பெற்று கட்ட வேண்டும். பணிகள் நடக்கும் இடத்தின் முன்பு நகராட்சி கட்டட அனுமதி பெற்ற எண்களை காட்சிபடுத்த வேண்டும்.

ஆனால் சிவகங்கை நகராட்சி பகுதியில் கட்டப்படும் கட்டடங்கள் பெரும்பாலானவற்றில் கட்டட அனுமதி எண் இல்லை. கட்டப்படும் கட்டடங்கள் அனுமதி பெற்று தான் கட்டப்படுகிறதா என்றும் தெரியபடுத்துவதில்லை. நகராட்சியில் கட்டப்படும் கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டப்படும் கட்டடங்கள் வரைபடம் தயாரித்து திட்ட அனுமதி பெற்று கட்டப்படுகிறதா. அல்லது வரைபடத்தில் உள்ள அமைப்புக்கும் கட்டட அமைப்புக்கும் வேறுபாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் கட்டடம் கட்டுபவர்கள் தெருக்களின் மையப்பகுதியில் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்து பல நாட்களாக அகற்றாததால் மக்களுக்கு இடையூறாகவும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை.

ஆனால் சிவகங்கை நகராட்சியில் ஆய்வு செய்வதற்கு நகர் அமைப்பு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியை தேவகோட்டை நகர் அமைப்பு ஆய்வாளர் கூடுதலாக சேர்த்து கவனிக்கிறார். எனவே நிரந்தர பணியாளரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகராட்சியில் கட்டடம் கட்டுபவர்கள் முறைப்படி வரைபடம் தயாரித்து திட்ட அனுமதி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் அனுமதி பெற்று கட்டடம் கட்டினால் தான் வீட்டுவரி, குடிநீர் மின் இணைப்பு உள்ளிட்ட வசதி பெற முடியும்.

எனவே பெரும்பாலோனார் அனுமதி பெற்று தான் கட்டடம் கட்டுகின்றனர். அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதோடு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us