ADDED : ஏப் 06, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் மனைவி பிரீத்தி 34. ஜன.3 வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பேசினார். அவர் தன்னை முதலீட்டு ஆலோசகராகஅறிமுகம் செய்துகொண்டார். அவர் கூறியதை நம்பிய பிரீத்தி 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் ரூ.26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார்.
பணத்தை பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தொகையை அனுப்பவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
எஸ்.ஐ., முருகானந்தம் விசாரித்து வருகிறார்.

