ADDED : ஏப் 24, 2025 07:02 AM
சிவகங்கை: சிவகங்கை காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட மைய நுாலகம் நுாலக நண்பர்கள் சார்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலர் சார்பு நீதிபதி ராதிகா முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை, புத்தகம் வழங்கப்பட்டது. வழங்கறிஞர் சங்க செயலாளர் சித்திரைசாமி, மாவட்ட முதல் நிலை நுாலகர் வெங்கடவேல் பாண்டி, நுாலகர் முத்துக்குமார், எழுத்தாளர் ஈஸ்வரன், தலைமையாசிரியர் பாண்டிராணி, ரமேஷ்கண்ணன், முத்து கண்ணன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் புத்தக தின விழா நடைபெற்றது. மாவட்ட நுாலக அலுவலர் வெங்கடவேல் பாண்டி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தார். நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். நல்லாசிரியர் கண்ணப்பன், எழுத்தாளர் ஈஸ்வரன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மன்னர் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், தேவகோட்டை பேச்சாளர் ராமநாதன் சிறப்புரை ஆற்றினர். நுாலகர் கனகராஜன் நன்றி கூறினார்.
* கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் புத்தக தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் அழகப்பன் தலைமை வகித்தார். ஆசிரியர் பிரபு, கல்லல் கிளை நுாலகத்தில் உறுப்பினராக சேர்ந்த மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். கிளை நுாலகர் வசந்த செல்வி, ஆசிரியர்கள் சாத்தையா, அண்ணாத்துரை, மாரிமுத்து, சுப்பிரமணியன், விஜயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* திருப்புத்தூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புரவலர் பாராட்டு, சொல்லரங்கம், படைப்பாளிகளுக்கு பாராட்டு நடந்தது. பிளாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கிளை நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். கவிஞர்கள் கோவிந்தராஜன், லெட்சுமி, பார்கவி, கமலநாதன் ஜோதிகா அப்துல் வாஹித் பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு நுாலகர் ஜெயச்சந்திரன் பரிசு வழங்கினார்.