sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி

/

வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி


ADDED : ஜன 11, 2025 10:36 PM

Google News

ADDED : ஜன 11, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ், 29; பழைய இரும்புக்கடைக்காரர். இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு நவ., 10ல் ஒரு லிங்கில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

அந்த லிங்கில் முகமது ரியாசை தொடர்பு கொண்ட நபர், ஒரு நிறுவனத்தின் பெயரைக்கூறி, அதில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய முகமது ரியாஸ், அவர் கூறிய ஆறு வங்கி எண்களுக்கு, 11 பரிவர்த்தனைகளில் ஆன்லைனில், 27.28 லட்சம் ரூபாயை மாற்றியுள்ளார்.

பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்த அந்த பணத்திற்கு லாபத்தொகை எதுவும் தரமால், மீண்டும் பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த முகமது ரியாஸ் போலீசில் புகார் அளித்தார். சிவகங்கை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார், மோசடி நபரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us