sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு

/

குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு

குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு

குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு


ADDED : செப் 23, 2024 06:24 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்ட மனு எழுத சிலர் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, இளைஞர்கள் குழு அமைத்து இலவசமாக மனு எழுதி தர கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இங்கு திங்கள் தோறும் பொது குறைதீர் கூட்டம் நடைபெறும். பட்டா மாறுதல், நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக 800க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் நேரடியாக மனு அளிப்பார்கள்.

திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகம் முன் சிலர் மனு எழுதி கொடுத்து, கட்டணம் வசூலிப்பதாக கலெக்டரிடம் புகார் சென்றது.

இதையடுத்து, கலெக்டர் அலுவலக தெற்கு பகுதி வாசலில் நேரு யுவகேந்திரா இளைஞர்களை நியமித்து, இலவசமாக மனு எழுதிதர நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு வழங்க நேரடியாக இவர்களிடம் சென்று இலவசமாக மனு எழுதி, பதிவு செய்த பின் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us