sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

/

காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை


ADDED : ஏப் 14, 2025 03:43 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயமுற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே உள்ள நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் 29. இவருக்கும் வேறு சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. நேற்று மாலையில் சரத்குமார் நண்பர் மரக்காத்தூர் சிவசங்கருடன் 28, இருப்பான்பூச்சி கிராமம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியது. இதில் சரத்குமார் அதே இடத்தில் இறந்தார். சிவசங்கர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us