/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பார்வையற்றவரை பாதியில் இறக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட்
/
பார்வையற்றவரை பாதியில் இறக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட்
பார்வையற்றவரை பாதியில் இறக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட்
பார்வையற்றவரை பாதியில் இறக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட்
ADDED : செப் 05, 2024 02:24 AM
கடையம்:தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதுாரைச் சேர்ந்தவர் கந்தசாமி 55. பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தற்போது பாவூர்சத்திரத்தில் வசித்து வருகிறார். ரேஷன் அட்டை பொட்டல்புதுாரில் இருப்பதால், மாதம் தோறும் அங்கு சென்று அரிசி, சர்க்கரை வாங்கி வருவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல மனைவியுடன் பொட்டல்புதுார் சென்று, ரேஷன் வாங்கினார்.
பின், இருவரும் அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற அரசு பஸ்சில் பயணித்தனர். கண்டக்டர் பழனிசாமி, கந்தசாமிக்கு பார்வையற்றவருக்கான இலவச பயண சீட்டு வழங்கினார். மேலும், 5 கிலோ ரேஷன் அரிசிக்கு லக்கேஜ் வாங்க வேண்டும் என்றார். மேலும் அவதுாறாக பேசியதுடன் மனைவியுடன் அவரை திருமலையப்பபுரம் -- முதலியார்பட்டி ரோட்டில், நடுவழியில் இறக்கி விட்டார்.
இதுகுறித்த புகாரின்படி, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்து, பஸ் டிரைவர் தற்காலிகமானவர் என்பதால் அவரை பணி நீக்கம் செய்தனர். கண்டக்டர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.