sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் புளியரையில் கலெக்டர் அதிரடி ஆய்வு

/

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் புளியரையில் கலெக்டர் அதிரடி ஆய்வு

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் புளியரையில் கலெக்டர் அதிரடி ஆய்வு

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் புளியரையில் கலெக்டர் அதிரடி ஆய்வு


ADDED : ஏப் 24, 2024 02:21 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கோட்டை:கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, புளியரை பகுதியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதானா கிராமங்களில் உள்ள கோழி பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளா- தமிழக எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை வாகன சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது சோதனை சாவடி, அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் கால்நடை உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து பேர் ஒரு குழுவாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் டயர்களில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி அளிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் சுத்தம் செய்யப்படாமல் வந்தால் அந்த வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் தமிழக- கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை புளியரை பகுதியில் பறவை காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையினை கலெக்டர் கமல்கிஷோர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த வழியாக வரும் வானகங்களுக்கு தடையில்லாமல் தொடர்ந்து கிரிமி நாசினிகளை தெளிக்க வேண்டும். வாத்துக்கள், பறவைகள் கொண்டு வரப்படும் வாகனங்களை அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

----------------

பாக்ஸ் மேட்டர்...

----------------

கனிம வள வாகனங்கள்

நடவடிக்கை தேவை

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக கேரளாவில் இருந்து அதிகளவில் லாரிகள் தமிழகத்திற்கு கனிம வளம் ஏற்றி செல்ல வந்து செல்கின்றன. பறவை காய்ச்சல் பாதிப்பு குறையும் வரை, கனிம வள வாகனங்களை நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us