/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வங்கி ஊழியர் துாக்கிட்டு பலி; கணவர் தற்கொலை முயற்சி
/
வங்கி ஊழியர் துாக்கிட்டு பலி; கணவர் தற்கொலை முயற்சி
வங்கி ஊழியர் துாக்கிட்டு பலி; கணவர் தற்கொலை முயற்சி
வங்கி ஊழியர் துாக்கிட்டு பலி; கணவர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 09, 2024 12:05 AM
சங்கரன்கோவில் : சேலத்தை சேர்ந்த கந்தசாமி மகன் இனியவன், 33. திருவேங்கடம் தாலுகா, கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக உள்ளார். இவர் மனைவி, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த செங்கோட்டுவேல் மகள் சவுமியா, 31, தனியார் வங்கி ஊழியர்.
இருவரும் திருவேங்கடம் என்ற ஊரில் வசித்தனர். டாக்டர் இனியவன் பயிற்சிக்காக, ஆறு மாதம் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் வந்தது. நேற்று முன்தினம் இரவில், தன் தாய் வீட்டிற்கு செல்லுமாறு சவுமியாவை இனியவன் கூறியதாக தெரிகிறது. இதை ஏற்காத சவுமியா, அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நேற்று காலை வரை அவர் வராததால், அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் சவுமியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த டாக்டர் இனியவன், தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி, நெல்லை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இனியவனுக்கும், சவுமியாவுக்கும் திருமணம் ஆகி, சில மாதங்களே ஆவதால், சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ., கவிதா, விசாரிக்கிறார்.