sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

தந்தை, மகன் கொலையில் நான்கு பேர் கைது

/

தந்தை, மகன் கொலையில் நான்கு பேர் கைது

தந்தை, மகன் கொலையில் நான்கு பேர் கைது

தந்தை, மகன் கொலையில் நான்கு பேர் கைது


ADDED : மே 24, 2024 12:12 AM

Google News

ADDED : மே 24, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே இரவில் தந்தை, மகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துமலை அருகே கீழக்கலங்கலைச் சேர்ந்தவர் நடராஜன் 60. மகன் கனகராஜ் 32. மே 21 இரவில் வீட்டு முற்றத்தில் குடும்பத்தினர் அமர்ந்திருந்த போது 5 பேர் கும்பல் கனகராஜ், தந்தை நடராஜனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் இறந்தனர்.

போலீசார் விசாரித்து மலையன்குளம் வெங்கடேஷ் 28, வீரவநல்லூர் ராகுல் 23, வேணு 21, வனராஜா 19, ஆகியோரை கைது செய்தனர்.

கனகராஜின் மனைவி கவிக்குயிலுக்கும் வெங்கடேசுக்கும் திருமணத்துக்கு முன் பழக்கம் இருந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகும் பழக்கம் தொடர்ந்ததால் வெங்கடேசை, கனகராஜ் தரப்பினர் 2023 ஆகஸ்ட் 27ல் மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன் அரிவாளால் வெட்டினர். இதற்கு பழிக்கு பழியாக வெங்கடேஷ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கனகராஜையும், அவரது தந்தையையும் கொலை செய்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us