ADDED : ஜூலை 04, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 35, கேரளாவில் பெயின்டராக இருந்தார்.
இவரது மனைவி, ஆடு வளர்க்கிறார். ஆட்டை பக்கத்து வீட்டு நாய் கடித்தது. இதை கணவருக்கு தெரிவித்தார். நாயின் உரிமையாளரை கண்டித்தார்.
கருப்பசாமியின் தலையில் நாய் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கினார். படுகாயமுற்ற கருப்பசாமி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நேற்று இறந்தார்.