/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஆலங்குளம் பேரூராட்சி தி.மு.க., தலைவி 'டிஸ்மிஸ்'
/
ஆலங்குளம் பேரூராட்சி தி.மு.க., தலைவி 'டிஸ்மிஸ்'
ADDED : அக் 23, 2025 12:48 AM

தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவியாக இருந்த தி.மு.க.,வை சேர்ந்த சுதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த, 2021ல் நடந்த தேர்தலில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி 7வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சுதா வெற்றி பெற்றார். பின், பேரூராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், 2022ல் சுதாவிற்கு சொந்தமான குடியிருப்பு, வணிக வளாகங்களுக்கு சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி, 9வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், சென்னை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
விசாரணை செய்த நீதிமன்றம், சுதாவின் 7வது வார்டு உறுப்பினர் பதவியையும், பேரூராட்சி தலைவர் பதவியையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அந்த மனுவை விரைந்து விசாரணை செய்து, ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, சுதாவை பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக அறிவித்தார். ஏற்கனவே, சுதாவிற்கு சொத்து வரி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும், பணம் கட்டாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுதாவிடம் தகுதி நீக்கம் தொடர்பான ஆணையையும், பேரூராட்சி அதிகாரிகள் வழங்கினர்.