sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

நீலகிரியில் பணியில் சேர்ந்தார் 'நகர' மறுத்த உதவி இயக்குனர்

/

நீலகிரியில் பணியில் சேர்ந்தார் 'நகர' மறுத்த உதவி இயக்குனர்

நீலகிரியில் பணியில் சேர்ந்தார் 'நகர' மறுத்த உதவி இயக்குனர்

நீலகிரியில் பணியில் சேர்ந்தார் 'நகர' மறுத்த உதவி இயக்குனர்


ADDED : டிச 12, 2024 02:30 AM

Google News

ADDED : டிச 12, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருந்த வினோத் நீலகிரியில் பணியில் சேர்ந்தார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமம் தோண்டி எடுக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிகள் செயல்படுவது உள்பட முறைகேடு புகார்கள் வந்தன.

எனவே தென்காசி கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத்தை, நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்து துறை கமிஷனர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டார். ஆனால் வினோத் அங்கு சென்று பணியில் சேராமல் தென்காசியிலேயே இருந்து வந்தார்.

தென்காசியில் புதிய உதவி இயக்குனராக பணியில் சேர கிருஷ்ணகிரியில் இருந்து வந்த ஈஸ்வரன் காத்திருந்தார். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வினோத் அவசர அவசரமாக நீலகிரி சென்று உதவி இயக்குனர் பொறுப்பேற்றார். ஈஸ்வரன் தென்காசியில் பணியில் சேரவில்லை. அவர் மீண்டும் கிருஷ்ணகிரி சென்றார். தென்காசி மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பை திருநெல்வேலி மாவட்ட உதவி இயக்குனர் பாலமுருகன் கூடுதலாக கவனிக்கிறார்.






      Dinamalar
      Follow us