sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

வீடு கட்ட அனுமதிக்கு லஞ்சம் பஞ். தலைவர், ஒப்பந்ததாரர் கைது

/

வீடு கட்ட அனுமதிக்கு லஞ்சம் பஞ். தலைவர், ஒப்பந்ததாரர் கைது

வீடு கட்ட அனுமதிக்கு லஞ்சம் பஞ். தலைவர், ஒப்பந்ததாரர் கைது

வீடு கட்ட அனுமதிக்கு லஞ்சம் பஞ். தலைவர், ஒப்பந்ததாரர் கைது


ADDED : ஜன 11, 2024 01:50 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி அருகே குத்துக்கல்வலசை ராஜாநகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார்.

இவரது உறவினரான கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஐஸ்வர்யா குடியிருப்பை சேர்ந்த ரெஜினீஸ் பாபு, 44, என்பவர் வீடு கட்டும் பணியை மேற்கொள்கிறார். இவர், வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெற விண்ணப்பித்திருந்தார்.

குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ், 39, புதிய வீடு கட்ட, திட்ட மதிப்பீட்டில் 2 சதவீதம் அதாவது, 46,000 ரூபாயை லஞ்சமாக கேட்டார். பணம் கொடுக்க விரும்பாத ரெஜினீஸ்பாபு, இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவி கொடுத்த, 46,000 ரூபாயை நேற்று ஊராட்சி அலுவலகத்தில், ரெஜினீஸ்பாபு கொடுத்தார். அதை சத்யராஜின் நண்பரும் கட்டட கான்ட்ராக்டருமான சவுந்தரராஜன், 40, என்பவர் பெற்று, சத்யராஜிடம் கொடுத்தார்.

மறைந்திருந்த போலீசார், ஊராட்சித் தலைவர் மற்றும் கட்டட கான்ட்ராக்டரை கைது செய்தனர். இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சத்யராஜ், அ.தி.மு.க.,வில் இருந்தார். தற்போது, தி.மு.க.,வில் உள்ளார்.






      Dinamalar
      Follow us