/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சங்கரன்கோவில் கோயிலில் ஆடித்தபசு கோலாகலம்
/
சங்கரன்கோவில் கோயிலில் ஆடித்தபசு கோலாகலம்
ADDED : ஆக 08, 2025 02:05 AM

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி நேற்று மாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சங்கர நாராயண சுவாமி கோயிலில் சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இந்தாண்டுக்கான விழா ஜூலை 28 காலை கோமதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடக்கிறது. தினமும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப் படி விழாவும் நடந்தது. ஆக.,5ல் தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நேற்று மாலையில் தெற்குரதவீதியில் நடந்தது.
தபசு கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு, சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி தரும் காட்சி நடந்தது. தொடர்ந்து அம்மன், சுவாமியை வலம் வந்தார். இரவு சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த னர்.