sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

உணவு ஒவ்வாமை இறப்பு 5 ஆனது

/

உணவு ஒவ்வாமை இறப்பு 5 ஆனது

உணவு ஒவ்வாமை இறப்பு 5 ஆனது

உணவு ஒவ்வாமை இறப்பு 5 ஆனது


ADDED : ஜூன் 18, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் அன்னை முதியோர் இல்லம் நடத்தி வந்தார்.

அதில் ஆதரவற்ற முதியோர் 60க்கும் மேற்பட்டோர் தங்கியிருதனர்.

கடந்த 10ம் தேதி அங்கு அசைவ உணவு சாப்பிட்ட சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் 15 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சங்கர் கணேஷ் 48, முருகம்மாள் 45, அம்பிகா 40 , ஆகிய 3 பேர் இறந்தனர். பின்னர் தனலட்சுமி 70, என்பவரும் இறந்தார்.

இதனால் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்த 11 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சையில் இருந்த முப்பிடாதி 54, நேற்று இறந்தார்.

இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆனது.






      Dinamalar
      Follow us