sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல்: இருவர் கைது

/

ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல்: இருவர் கைது

ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல்: இருவர் கைது

ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல்: இருவர் கைது


ADDED : மே 02, 2025 11:19 PM

Google News

ADDED : மே 02, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கொண்டு சென்ற ஹவாலா பணம் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்

தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே கணக்கில் வராத ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்ந்து நடக்கிறது.

சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் , ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பொதுப் பெட்டியில் வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லுாரை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் பையில் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் வைத்திருந்தார். இவர் கடையநல்லுாரில் ரயிலில் ஏறி உள்ளார். அந்த பணத்திற்கான கணக்கு காண்பிக்க முடியாததால் அவரை போலீசார் கைது செய்தனர். அதே ரயிலில் அவருடன் பயணித்த விருதுநகரை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவரும் கைது செய்யப்பட்டார். பாலாஜி நீண்ட காலமாக கொல்லத்தில் குடியிருந்து வருகிறார். இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் புனலுார் ரயில்வே ஸ்டேஷனில்மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us